2021-09-11 09:58:05
# மகாகவி பாரதியார் நினைவு தினம்: செப்டம்பர் 11
வாழ்க்கைக் குறிப்பு:
பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921.
பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.
பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்.
பாரதியாரின் இயற்பெயர்: சுப்ரமணியம் (அ) சுப்பையா.
மனைவி: செல்லம்மாள் (1897-ல் மணந்தார்).
பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி: மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி (1904).
இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.
பாரதி என்பதன் பொருள் கலைமகள்.
பாரதியின் சிறப்பு பெயர்கள்:
மகாகவி
தேசியக்கவி
விடுதலைக்கவி
பாட்டுக்கொரு புலவன்
முண்டாசு கவிஞன்
பைந்தமிழ் தேர்ப்பாகன்.
பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா (ராமசாமி ஐயங்கார்).
பாரதி தன்னை "ஷெல்லிதாசன்" என அழைத்துக்கொண்டார்.
பாரதியின் முக்கிய படைப்புகள்:
பாப்பா பாட்டு
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாஞ்சாலி சபதம்.
பாரதியின் முதல் பாடல் - தனிமை இரக்கம்.
வெளியிட்ட பத்திரிக்கை: விவேகபானு (மதுரை பத்திரிகை)
பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள்:
ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம்)
தராசு
சந்திரிகையின் கதை.
நாடகநூல் : ஜெகசித்திரம்.
பத்திரிகைத் துறையில் பாரதி:
பாரதியார் பத்திரிக்கைகளின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார்.
பாரதியார் "இந்தியா" என்ற வாரப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். அதனை ஆங்கில அரசு தடை செய்ததால் புதுவையில் வெளியிடப்பட்டது.
பாரதியார் சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
நினைவுச் சின்னங்கள்:
எட்டையபுரம், சென்னை மற்றும் புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லங்கள் நினைவு இல்லங்களாக போற்றப்பட்டு வருகிறது.
இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பெயரில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
மணிமண்டபம்:
பாரதிக்கு எட்டையபுரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அதன் மையத்தில் அவரின் ஏழு அடி திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இது 11.12.1999 அன்று அப்போதைய பஞ்சாப் முதல்வர் தர்பாரா சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
முக்கிய குறிப்பு:
மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள் ஆண்டுதோறும் "மகாகவி நாளாக" கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி "பாரதி இளங்கவிஞர் விருது" மற்றும் ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
2.1K viewsedited 06:58