Get Mystery Box with random crypto!

சென்னை: வர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும | Chennailive

சென்னை: வர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது. சென்னையில் 52 மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் சென்னை மற்றும் ஸ்ரீகரிகோட்டா நடுவே வர்தா புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புயல் சென்னையை நெருங்கியபடி இருப்பதால் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.காலை 11 மணி நிலவரப்படி சென்னையில் 67 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. மரங்கள் பயங்கர வேகத்தில் ஆட்டம்போடுகின்றன.



மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் குழந்தைகளை அழைத்து வந்து சிலர் புயலை காண்பிப்பதை பார்க்க முடிந்தது