🔥 Burn Fat Fast. Discover How! 💪

B.Pharm / D.Pharm முடித்தவர்களாக நீங்கள்? தமிழக அரசில் 84 காலி | OFF CAMPUS DRIVES 2022

B.Pharm / D.Pharm முடித்தவர்களாக நீங்கள்? தமிழக அரசில் 84 காலிப்பணியிடங்கள்: உடனே அப்ளை பண்ணிடுங்க!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் சென்னையில் காலியாக உள்ள 84 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

மொத்த பணியிடங்கள் – 84

மருந்தாளர் (சித்தா) – 73

மருந்தாளுநர் (ஆயுர்வேதம்) - 6

மருந்தாளுனர் (யுனானி) - 2

மருந்தாளுனர் (ஹோமியோபதி) - 3

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பி.பார்ம், டி.பார்ம் (B.pharm, D.Pharm) படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

http://www.mrbexam.in/howtoapply.php என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, இப்பணிக்குத் தேவையான அனைத்து விபரங்களையும் பதிவேற்றம் செய்து வைத்திருக்க வேண்டும்.

இதனையடுத்து அனைத்து விபரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து வருகின்ற மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, டிஏபி, உள்ளிட்ட பிரிவினர் ரூபாய் 300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பகட்டணத்தை இணைய வங்கி அல்லது UPI முறையில் செலுத்தலாம்.

தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிப்பார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:
தேர்வாகும் விண்ணப்ப தாரர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆண் மற்றும் பெண்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, http://www.mrbexam.in/howtoapply.php என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்து கொள்ளலாம்.