Get Mystery Box with random crypto!

கி ல் லா டி க ள்

Logo of telegram channel killadigal — கி ல் லா டி க ள்
Logo of telegram channel killadigal — கி ல் லா டி க ள்
Channel address: @killadigal
Categories: Entertainments
Language: English
Subscribers: 633
Description from channel

Instant View (er)
https://t.me/joinchat/AAAAAEAbd5Vzk0rPTMGF3g
கில்லாடிகள்
https://t.me/joinchat/AAAAAEQcYRvBOjdE4nepKw
Video Forwarder
https://t.me/joinchat/A2Lo4kJW9uiyQk4e8LVTqg
Admin---> @nbalakumar

Ratings & Reviews

2.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

0

2 stars

2

1 stars

0


The latest Messages

2021-08-29 10:24:15 ஆசியாவிலேயே பெரிய பழமையான யானை சிலை!

கங்கைகொண்டசோழபுரம் அருகே 4 கி.மீ. தொலைவில் வடக்கு எல்லையில் இளையபெருமாள் நல்லூர் என்ற சிற்றூரில் இந்த யானை சிலை உள்ளது. சலுப்பை அழகர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.

இச்சிலை சோழர் காலத்திய சிற்பம் என்றாலும், 16 - 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் காலத்தில் அப்போதைய வடிவமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது 60 அடி உயரம், 33 அடி நீளம், 12 அடி அகலம் உயரம் உடைய ஆசியாவிலேயே பெரிய யானைச் சிலையாகும்.

இச்சிலை வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு ஆகிய கலவையினால் சுட்ட செங்கற்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. யானை சிலையின் கழுத்து, உடலின் இரு புறங்களிலும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சலுப்பை அழகர் கோயிலின் அருகில் பலா தோப்பில் பலா பழத்தைத் திருடிய திருடனைப் பிடிக்க கோயிலில் இருந்த நாய் ஒன்று துரத்தியுள்ளது. அந்நேரத்தில் அந்தத் திருடனை யானை ஒன்று மடக்கிப் பிடித்துள்ளது. ஆகையால், அதைக் குறிக்கும் வகையில் யானையின் துதிக்கையில் பலா பழத்துடன் மனிதன் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது என்று இச்சிலைக் குறித்து இப்பகுதி மக்கள் கதையாக சொல்லி வருகின்றனர்.

சென்ற 11.12.2020 அன்று இச்சிலைப் பாதுகாப்பட்ட பழமையான சின்னம் எனத் தமிழகத் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டது.

உயர்ந்து நிற்கும் இந்த யானை சிலை அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.

புதுச்சேரி வரலாற்றுப் பேரவை.
137 viewsN.BalaKumar, 07:24
Open / Comment
2021-08-21 06:18:29 வணிகப்பொருளுக்கான பார்கோட்...!!

#BarCode

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??

விழிப்புணர்வுபதிவு....

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு.

பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,

சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள்….

அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி
சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்

,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.

அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,

471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று

இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.

இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada

20-29: In-Store Functions

30-37: France

40-44: Germany

45: Japan (also 49)

46: Russian Federation

471: Taiwan

474: Estonia

475: Latvia

477: Lithuania

479: Sri Lanka

480: Philippines

482: Ukraine

484: Moldova

485: Armenia

486: Georgia

487: Kazakhstan

489: Hong Kong

49: Japan (JAN-13)

50: United Kingdom

520: Greece

528: Lebanon

529: Cyprus

531: Macedonia

535: Malta

539: Ireland

54: Belgium & Luxembourg

560: Portugal

569: Iceland

57: Denmark

590: Poland

594: Romania

599: Hungary

600 & 601: South Africa

609: Mauritius

611: Morocco

613: Algeria

619: Tunisia

622: Egypt

625: Jordan

626: Iran

64: Finland

690-692: China

70: Norway

729: Israel

73: Sweden

740: Guatemala

741: El Salvador

742: Honduras

743: Nicaragua

744: Costa Rica

746: Dominican Republic

750: Mexico

759: Venezuela

76: Switzerland

770: Colombia

773: Uruguay

775: Peru

777: Bolivia

779: Argentina

780: Chile

784: Paraguay

785: Peru

786: Ecuador

789: Brazil

80 – 83: Italy

84: Spain

850: Cuba

858: Slovakia

859: Czech Republic

860: Yugoslavia

869: Turkey

87: Netherlands

880: South Korea

885: Thailand

888: Singapore

890: India

893: Vietnam

899: Indonesia

90 & 91: Austria

93: Australia

94: New Zealand

955: Malaysia

977: International Standard Serial Number for Periodicals (ISSN)

978: International Standard Book Numbering (ISBN)

979: International Standard Music Number (ISMN)

980: Refund receipts

981 & 982: Common Currency Coupons

99: Coupons
251 views, edited  03:18
Open / Comment
2021-08-16 07:09:52 ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்

#LocoPilot
#AsstLocoPilot


ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்

சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு.

ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.

ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக்கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்.

அதெல்லாம் சரி.. இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா?

அப்படி தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது?

தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும்.

VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.

அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு. பிறகு விளக்கு எரியும், அதையும் அவர்கள் உதாசீனம் படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கு எரியும், அதையும் உதாசீனம் படுத்தினால், வண்டி தானாகவே நின்று விடும், Automatic braking system மூலம்.

ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தை கூட்டுவது, குறைப்பது, ஹரன் அடிப்பது போன்ற வேளைகளில் இருந்தால், அந்த பொத்தானை அமுக்க வேண்டியது இல்லை.

இந்த காலத்தில் தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, முன்நாளில் எல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.

இன்று வரையில் ரயில்வே ஓட்டுனர்களுக்கு தனியாக கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும்.வயதான ஓட்டுநர்கள் சிலர் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பைகளில் உச்சாவை பிடித்து வைத்து கொள்ளத்தான் முடியும்.

ராத்திரி பத்து மணிக்கு வண்டி எடுத்தால் காலை 08.00 மணி ஆகும் அடக்கி கொண்டுதான் போக வேண்டும்.

ஆனால் மலம் கழிப்பது என்பது முடியாத விஷயம் ஒரு நிமிடம்தான் ஸ்டேசனில் நிக்கும் அடுத்து சிக்னல் விழுந்த உடன் வண்டி எடுக்கனும். 110 kmph குறையாமல் வண்டி ஓட்டனும். பஞ்சுவாலிட்டி இருக்கு. இதிலே இன்ஜின் பிராபளம்! டிராக்கில் ஏதேனும் பிராப்ளம்! சிக்னல் மனிதர்கள் சூசைட் என கண் விழித்து ஓட்டனும்!

கேட் horn அடிக்கனும்! 60 செக்கண்டுக்கு vcd பிரஸ் பன்னனும்! அசிஸ்டெண்ட் தூங்கிட்டானா அவரை எழுப்பனும்! 19 kwh கரண்டின் கீழ் வேலை! இன்ஜீன் சூடு!

ராத்திரியில் வண்டியின் வேகத்தை பொருத்து கத்தி போல குத்தும் குளிர். எக்ஸஸ் ஸ்பீடு போக கூடாது! டிரையின் டைமிங் மெயிண்டன் பன்னனும்! சிவப்பு சிக்னலை தாண்டினால் ரீமுவ்டு பிரம் சர்விஸ் என பல அழுத்தங்கள் இருக்கு!

இருந்தும் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கனும்! காடுகளில் போகும் போது செயின் இழுத்து வண்டி நிக்கும் போது யார் உதவியும் இரவு நேரத்தில் கிடைக்காது சிங்கம் புலி யானை என இருக்கும்.

டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதி கொடுக்கனும். இதேதான் பகல் நேரங்களிலும்! சரக்கு வண்டி எனில் எக்ஸ்பிரஸ்க்காக லூப் லைனில் ஒதுக்குவார்கள்... அப்போ ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்கு ஓடனும் அவர் வேண்டா வெறுப்பாக அனுமதிப்பார். முடியாத பட்சத்தில் வாட்டர் கேனில் தண்ணீர் இருந்தால் பொது வெளிக்கு மறைவா போய் இருக்க வேண்டியதுதான்!

சரக்கு வண்டியும் 16 டூ 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்பவர்கள் உண்டு! இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு! கடைகளை தேடி ஓடனும்! சாப்பிடும் நேரத்தில் வண்டி ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கண்ட்ரோலர்களோ யாருமே சாப்பிட்டார்களா சாப்பாடு வாங்கி விட்டீர்களா என கேட்பதும் இல்லை அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை!

https://i.imgur.com/fpKHdjF.jpg
288 views, 04:09
Open / Comment
2021-08-15 08:09:46 முன்னோர்களின் பாரம்பரிய நெல் சேமிப்பு கலன்கள்

#Ancient
#PaddyStorageContainers

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி தண்ணீரை எப்படி சிக்கனமாகவும், சீராகவும் பயன்படுத்தி விவசாயத்தை கையாள வேண்டும் என கற்றுக்கொடுத்த மன்னன் தான் கரிகாலச்சோழன்.

அந்த காலத்திலேயே கோயில்கள் மட்டுமல்லாமல், பஞ்சம் வரும் காலங்களில் பயன்படுத்துவதற்காக தானியங்களை, விதைகளை சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் நம் முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவை இன்றும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வீடுகளில் உட்கார திண்ணை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்கள், பத்தாயங்கள் எனப்படும் தானிய சேமிப்பு கலன்கள் இருந்துள்ளது தெரிய வருகிறது.

இப்பகுதியில் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க செல்லும் போது அந்த வீட்டில் தானிய குதிர்களும், பத்தாயங்களும், வைக்கோல் போர்களும் இருந்தாலே அந்த குடும்பம் எந்த அளவுக்கு வசதியானது, எதிர்கால திட்டமிடல் எப்படி உள்ளது என்பதை யூகித்து அதற்கு ஏற்றவாறு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது இன்றளவும் நிகழ்கிறது.

500 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்று ஒரு மிகப்பெரிய தானியக் களஞ்சியத்தை பாபநாசம் அருகே திருப்பாலத்துறையில் உள்ள பாலைவனநாதர் கோயிலில் அமைத்துள்ளனர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தானியக்களஞ்சியமாக கருதப்படும் இது 36 அடி உயரமும், 84 அடி சுற்றளவும் கொண்டது. இதன் அடிப்பகுதி வட்ட வடிவிலும், மேல்பகுதி கூம்பு வடிவிலும் கதவுகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 90 ஆயிரம் கிலோ தானியத்தை சேமித்து வைக்க முடியும். இந்த தானியக்களஞ்சியம் எவ்வித சேதமும் இன்றி, தமிழர்களின் சேமிப்புத்திறனுக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்குகிறது.

பத்தாயம்:-

ஒன்று அல்லது ஒன்றரை அடி அகலமும் நான்கு அல்லது ஐந்து அடி நீளமும் உள்ள பலகைகளை சதுரமாகவோ, செவ்வகமாகவோ பெட்டிபோல இணைத்து (இதற்கு சட்டி என்று பெயர்) , அந்த சதுர பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இணைத்து (நான்கு அல்லது ஐந்து சட்டிகள்) ஒரு உயரமான கொள்கலன் செய்வார்கள்.. இதில் கொள்ளளவிற்கேற்ப இருபத்தைந்து மூட்டைகளோ.. ஐம்பது மூட்டைகளோ வரை சேமிக்கலாம்.. ( ஒரு மூட்டை என்பது 70 கிலோ) அவரவர்களின் விளைநிலங்களின் அளவை பொறுத்து ஒன்று, இரண்டு, மூன்று நான்கு கூட வைத்திருப்பார்கள்..

கோட்டை:-

வைக்கோலை கயிறுபோல திரித்து (இதன் பெயர் பிரி)அதனை ஒரு நட்சத்திரம் வரைவதுபோல குறுக்கும் நெடுக்குமாக தரையில் விரித்து அதன் மீது உதிரி வைக்கோலை பரப்பி அதில் நெல்லை கொட்டி ஒரு பந்துபோல உருட்டி வைக்கோல் பிரிகளால் இறுக்க கட்டி விடுவார்கள்.. பிறகு இதன் மீது மாட்டு சாணத்தால் மெழுகி காயவைத்து விடுவார்கள்.. இதில் சுமார் ஒரு மூட்டை அளவு நெல்லை பாதுகாக்கலாம்... மறுபடியும் அடுத்த பருவத்திற்கு பயிரிட தேவையான விதை நெல்லை இப்படி பாதுகாப்பார்கள்.. இப்படி பாதுகாப்பதால் அந்த விதை பூச்சி புழுக்கள் அண்டாமல் ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையிலேயே இருக்கும்.. இதனால் விதை நெல் முளைப்புத்திறன் குறையாமல் பாதுகாக்கப்படும் ..

சேர் (சேரு) :-

முதலில் வைக்கோலை மிக நீண்ட பிரியாக திரித்துக்கொள்வார்கள் .. வீட்டின் வாசலில் குறைந்தது ஆறு அடி விட்டமுள்ள அரை அடி(அ) ஒரு அடி உயரமுள்ள மண் மேடு அமைத்து அதில் உதிரி வைக்கோலை பரப்பி பிறகு அதில் நெல்லை கொட்டி.. திரித்து வைத்த வைக்கோல் பிரியால் சுற்றி சுற்றி சுவர் போல் உயர்த்துவார்கள்.. இப்படி உயர்த்தி உயர்த்து சுமார் ஆறு முதல் எட்டு அடி உயரம் கொண்டு செல்வார்கள்.. பிறகு மேற்புறம் வைக்கோலால் கூரை வேய்ந்து மூடி விடுவார்கள்.. இது ஒரு தேர் போல காட்சியளிக்கும்.. இதில் குறைந்த பட்சம் இருபது மூட்டைகள் வரை சேமிக்கலாம்..

குதிர்:-

களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு உறைகள் என்று சொல்லப்படும் வளையங்கள் செய்து, அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒரு பெரிய கொள்கலன் செய்யப்படும்... இதன் கடைசி உறையின் கீழ் புறம் பக்கவாட்டில் நெல் எடுப்பதற்காக ஒரு துவாரம் அமைக்கப்பட்டிருக்றகும்.. இதனை வைக்கோலை அடைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள். தேவைப்படும் போது இதை திறந்து நெல்லை எடுக்கலாம்..இதில் சுமார் பத்து மூடைகள் வரை சேமிக்கலாம்...

கூன்:-

இது குயவர்களால் செய்யப்படும்.. முதுமக்கள் தாழி என்று சொல்லப்படுவது போல இருக்கும் சுட்ட களிமண்ணால் ஆனது... இதில் குறைந்தது ஒரு கலம் (ஒரு கலம் என்பது பன்னிரண்டு மரக்கால்) அளவு சேமிக்கலாம்.. இதில் நெல், அரிசி, இன்னும் மற்ற சிறு தானியங்களையும் சேமிப்பார்கள்...
266 views, edited  05:09
Open / Comment
2021-07-30 10:30:28 விலங்குகள் பற்றிய அறிய தகவல்கள்

#Animals
#InterestingFacts


மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.

200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.

நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.

மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.

நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.

பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.

ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.

ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.

சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.

நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.

ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.

வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.

ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.

வளர்பிறை கோடுகள் மேல் நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.

கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.

எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

"O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.

பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.

அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.

நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.

குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23.

வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்.

அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்.

செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்.

சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்.

பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்.

தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்.

பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்.

திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்.

கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்.

மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை.

பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்.

ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை.

பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்.

தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை.

https://i.imgur.com/SsVe52q.jpg
407 views, 07:30
Open / Comment
2021-07-14 15:29:37 கிரிக்கெட் வீரரின் கெளரவம் திரு. பிலிப் ஹியூஸ் :

நவம்பர் 25,2014 :

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி நடந்துகொண்டிருந்தது.

சவுத் ஆஸ்திரேலியா அணிக்காக இவர் 63 ரன்களுடன் களத்தில் விளையாடி கொண்டிருந்தார். நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட் வீசிய பவுன்சர் பந்து, அவரின் இடது காதுக்கு கீழே (ஹெல்மெட் கீழே) தாக்கி அப்படியே நிலைகுலைந்து மயங்கி விழுந்தார்.

மைதானத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போட்டியும் உடனடியாக நிறுத்தப்பட்டது

மூன்று நாட்கள் மருத்துவமனையில் சுயநினைவை இழந்து கோமாவில் இருந்தார். தன்னுடைய 26வது பிறந்தநாளை மூன்று நாட்களில் (நவ:30) கொண்டாட இருந்த நிலையில்,நவம்பர் 27 அன்று உயிரிழந்தார்.

ஒரே ஒரு பந்து ,நொடிக்கும் குறைவான நேரத்தில்.அவரின் உயிரையே பறித்துவிட்டது.

இந்த சம்பவம்,கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

டிசம்பர் 3 ஆம் தேதி,அவரின் இறுதி சடங்கு நடந்தது.அவரது நெருங்கிய உடன்பிறவா சகோதரர்களான/ ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களான மைக்கேல் கிளார்க், ஆரோன் பின்ச் அவரது சவப்பெட்டியை அழுதுகொண்டே தூக்கிச்சென்ற காட்சி பார்க்கும் அனைவரின் மனதையும் உலுக்கியது.

மறைவுக்கு பின் நடந்த மாற்றங்கள் :

பொதுவாக கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரருக்கு அடிபட்டு பெவிலியன் திரும்பினால் போட்டியின் அட்டவணையில் retired hurt என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவர் 63 ரன்களில் அடிபட்டு பெவிலியன் திரும்பி மரணித்ததால், retired hurt என்பதற்கு பதிலாக 63 நாட் அவுட் என்று மாற்றப்பட்டது.

இந்தியா,ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தொடர் டிசம்பர் முதல் நடப்பதாக இருந்தது. இந்த சோக நிகழ்வால் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

போட்டி நடந்த போது இறந்த இவரின் பெயர் 13வது வீரராக சேர்க்கப்பட்டது.

போட்டி நடப்பதற்கு முன்பு, இவரை கௌரவிக்கும் விதமாக 63 நொடிகள் மைதானத்தில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

ஆஸ்திரேலியா விளையாட்டு வீரர்கள் அனைவரும், இவரின் டெஸ்ட் கேப் எண்ணனான 408 நம்பரை தங்களின் பேஜ்ஜிற்கு கீழ் தைத்துவைத்திருந்தனர். மைதானத்திலும் 408 என்று பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது.

போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், 63 ரன்களை கடந்த போது பேட்டை உயர்த்தி காட்டி அவரை நினைவுகூர்ந்தனர்.

ஆஸ்திரேலியா அணி 408 ரன்களை கடந்த போது, போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இவரின் உடன்பிறவா சகோதரர் மைக்கேல் கிளார்க்கின் விருப்பத்தை ஏற்று, இவரின் ஒரு நாள் ஜெர்சியின் எண்ணான 64 ஓய்வு பெற்றதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது. அதாவது 64 என்கிற எண்ணை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அவரின் நினைவாக 64 எண்ணுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது.

அடுத்து நடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியிலும் இவரது கையொப்பமிட்ட கருப்பு பட்டையை அணிந்தே மைக்கேல் கிளார்க் விளையாடினார்.

அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது. நம்முடைய ஒரு நொடி அலட்சியத்தால் இழந்து விட வேண்டாம்.
470 viewsN.BalaKumar, 12:29
Open / Comment
2021-06-25 09:01:07 உலகின் மிக உயரமான தட்டையான மலை

உலகில் "டேபிள் டாப்" வகை அமைப்பைக் கொண்ட பல மலைகள் உள்ளன. உலகின் மிக உயரமான பிளாட்-டாப் மலையின் தலைப்புக்கு இரண்டு போட்டியாளர்களை நான் கவனம் செலுத்துவேன்.

ரோரைமா மவுண்ட் : ஆங்கில ஆய்வாளர் சர் வால்டர் ராலே 1596 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு தனது பயணத்தின் போது இந்த மலையை முதலில் விவரித்தார். இது வெனிசுலா / பிரேசில் / கயானா ஆகிய மூன்று நாடுகளின் மூன்று புள்ளிகளில் அமைந்துள்ளது. மலையின் மேற்புறம் 400 மீட்டர் உயரமுள்ள பாறைகளால் எல்லா பக்கங்களிலும் பாதுகாக்கப்படுகிறது. இதன் மொத்த உயரம் 2,810 மீ, மற்றும் அதன் உச்சிமாநாடு 31 கி.மீ² ஆகும். சுருக்கமாக, இது ஒரு பெரிய பிளாட்-டாப் மலை.

மேலே இருந்து மற்றொரு பார்வை இங்கே:

இரண்டாவது வேட்பாளர் டேபிள் மவுண்டன் , கேப் டவுன், தென்னாப்பிரிக்கா: அட்டவணையின் மேற்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1,086 மீட்டர் உயரத்தில் உள்ளது. "மேசையின்" நீளம் சுமார் மூன்று கிலோமீட்டர் (2 மைல்) ஆகும். கீழேயுள்ள படம் கேப் டவுன் நீர்முனையில் இருந்து முன் காட்சி.

டேபிள் மவுண்டன் நிச்சயமாக ரோரைமா மலையை விட உயர்ந்ததல்ல, எனது வருகைகளிலிருந்து, "பிளாட் டாப்" 31 சதுர கிலோமீட்டருக்கு மேல் இல்லை. ஆகவே ரொரைமா மவுண்ட் மிகப்பெரிய தட்டையான மலைக்கான பரிசை வென்றது.

ஆனால் தெளிவானது என்னவென்றால், கேபிள் கார் மூலம் யார் வேண்டுமானாலும் டேபிள் மவுண்டின் உச்சியை எளிதில் அடையலாம், அல்லது நீங்கள் உயர்த்தலாம், அதை நான் செய்தேன். நான் எடுத்த கிர்ஸ்டன்போஷ் தாவரவியல் பூங்காவில் தொடங்கும் ஸ்மட்ஸ் தடத்தின் ஒரு பகுதி இங்கே:

மேலே செல்ல சுமார் 1 மணி முதல் 2 மணி நேரம் ஆகும்.

மறுபுறம், ரோரைமா மலையின் உச்சியை அடைய, நீங்கள் நிபுணர்களுடன் ஏற வேண்டும்.

டேபிள் மவுண்டின் மேலிருந்து பார்க்கும் காட்சி கண்கவர். டேபிள் மவுண்டனின் உச்சியில் இருந்து கேப் டவுன் தொலைவில் உள்ளது. டேபிள் மலையின் உச்சியில் உள்ள அணை / நீர்த்தேக்கத்தைக் கவனியுங்கள். இந்த புகைப்படம் டேபிள் மலையின் மிக உயரமான இடமான மேக்லியர் பெக்கனுக்கு அருகில் எடுக்கப்பட்டது

ஸ்மட்ஸ் தடத்தைத் தொடர்ந்து கிர்ஸ்டன்போஷ் கார்டனில் எங்கள் உயர்வு தொடங்கியது. மேலே இருந்து கேப் டவுன் மற்றும் சிக்னல் ஹில்லின் பார்வை இங்கே:
62 viewsN.BalaKumar, 06:01
Open / Comment
2021-06-17 21:30:21 இராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்

#Top10Countries
#WithoutArmyForces


1. Costa Rica

Costa Rica சென்ட்ரல் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. Article 12 என்ற அரசியலமைப்பின் படி 1949 ல் இருந்து இங்கு ராணுவத்தடை உள்ளது. குறைந்த எண்ணிக்கையை கொண்ட மிலிட்டரி அணியே இங்கு உள்ளது. மற்றும் சிறிய போலீஸ் படைகள் உள்ளது.

2. Iceland

1869 ல் இருந்து ஐஸ்லாந்தில் நிரந்தரமான ஒரு ராணுவம் கிடையாது. இருந்தும் பாதுகாப்பு அமைப்பான NATO ல் ஒரு உறுப்பினராக உள்ளது. பாதுகாப்பிற்காக அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை போடப்பட்டுள்ளது. 1950 ல் இருந்து அமெரிக்கா ஐஸ்லாந்திற்கு ராணுவ பாதுகாப்பு கொடுத்து வருகிறது.

3. Monaco

மொனாக்கோ மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்த நாட்டிற்கு என எந்தவொரு வலுவான ராணுவப்படையும் கிடையாது. பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு மேற்பார்வையில் இந்த நாடு உள்ளது. இவர்களுக்காக இரண்டு சிறிய ராணுவப்படைகளை பிரான்சு ஒதுக்கியுள்ளது. சிறிய படைகளாக இருந்தாலும் சிறந்த பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மொனாக்கோவின் போலீஸ் படைகள் உள்நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்கிறது.

4. Vanuatu

தெற்கு பசுபிக் கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடு தான் இந்த வணாட்டு ( Vanuatu ). இந்த நாட்டிற்கு குறிப்பிடும்படியான ராணுவப்படை எதுவும் கிடையாது. உள்நாட்டுப்பிரச்னைகளை இங்குள்ள போலீஸ் படைகள் கவனித்துக்கொள்கிறது. இந்த படை இங்கு Vanuatu Mobile Force என அழைக்கப்படுகிறது. இந்த படையில் ஏறத்தாழ 300 ஆண், பெண் காவலர்கள் பணியில் உள்ளனர். மேலும் சிறந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கையாள்கின்றனர்.

5. Panama

சென்ட்ரல் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு தான் Panama. 1990 ல் இங்கு ராணுவ அமைப்பு முற்றிலுமாக கைவிடப்பட்டது. பனாமாவில் தேசிய பாதுகாப்பு படையும், போலீஸ் படையும் இணைந்து நாட்டின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது. மேலும் இவர்கள் நாட்டின் எல்லைப்பகுதியையும் பாதுகாக்கின்றனர்.

6. Mauritius

இந்திய பெருங்கடலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நாடு மொரிசியஸ். 1968 ல் இருந்தே இந்த நாட்டிற்கு நிலையான ஒரு ராணுவம் கிடையாது. 10,000 பேர் கொண்ட போலீஸ் படை இந்த நாட்டை பாதுகாக்கிறது. இதில் 8000 காவலர்கள் தேசிய பாதுகாப்பையும், 1500 பேர் சிறப்பு படையாகவும் செயல்படுகின்றனர். 500 பேர் கடற்கரை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

7. Marshall Islands

இது அமெரிக்காவில் உள்ள ஒரு தீவு நாடாகவும். ஆரம்பம் முதலே இந்த நாட்டில் போலீஸ் துறை மட்டுமே செயல்படுகிறது. உள்நாட்டு பாதுகாப்புக்காக இவர்கள் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்துகின்றனர். மேலும் கடற்கரையை பாதுகாக்க கண்காணிப்பு படகுகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த தீவு யுனைடட் ஸ்டேட் பாதுகாப்பின் கீழ் உள்ளது.

8. Dominica

Dominica மேற்கு இந்திய தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு. 1981 முதல் இந்த நாட்டிற்கு நிலையான ராணுவம் கிடையாது. இந்த நாட்டின் பாதுகாப்பு Regional Security System நாடி உள்ளது. இந்த திட்டம் சர்வதேச அளவில் கிழக்கு கரீபியனுடன் போடப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கை ஆகும்.

9. Saint Lucia

கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு தான் செயின்ட் லூசியா. எந்தவொரு ராணுவ பலமும் இல்லாத இந்த நாடு 116 பேர்களைக்கொண்ட இரண்டு காவல் படையாக பிரிக்கப்பட்டு நாட்டின் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்பெஷல் யூனிட்டும், கடற்கரை காவல் படையும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிபடுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு Regional Security System பொறுப்பேற்றுள்ளது.

10. Kiribati

சென்ட்ரல் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பகுதி தான் இந்த Kiribati. போலீஸ் படை மட்டுமே இங்கு செயல்படுகிறது. பாதுகாப்பிற்காக சிறிய ஆயுதங்களும், கேமராக்களும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ரோந்து பணிகளுக்காக படகுகள் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

https://i.imgur.com/m9NB3GI.jpg
150 views, 18:30
Open / Comment
2021-06-12 22:29:45 உலகின் 5 தீர்க்கப்படாத மர்மங்களை கொண்ட வினோத இடங்கள்

#MysteriousPlaces

1. Bigfoot

வடஅமெரிக்காவில் Bigfoot எனப்படும் மிகப்பெரிய ஒரு ஜந்து வாழ்வதாகவும், அது பார்க்க மிக பிரம்மாண்டமாக உடல் முழுவதும் ரோமங்களுடன், பார்க்க ஒரு கொரில்லா குரங்கை போல இருக்கும் என்றும், அது இப்போதும் வாழ்வதாகவும் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

கண்டறியப்பட்ட Bigfoot உடைய காலடித்தடம் 24 இன்ச் இருந்துள்ளது, இதை வைத்து இந்த creature 6 முதல் 9 அடி உயரம் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது ஒரு காலடி தடத்தை வைத்து உருவாக்கப்பட்ட யூகமே தவிர ஆதாரப்பூர்வமாக இது வரை நிரூபிக்கப்படவில்லை. சில ஆய்வாளர்கள் அது ஓர் வளர்ந்த பிரௌன் கரடியின் காலடி தடமாக கூட இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இது நிரூபிக்கப்பட்டதோ, இல்லையோ இதை வைத்து நிறைய கதைகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டு விட்டது. இன்று வரை இந்த Bigfoot தீர்க்கப்படாத ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.

2. Kryptos

Kryptos என்பது அமெரிக்காவை சேர்ந்த பிரபல சிற்பியால் 1990 ல் உருவாக்கப்பட்ட ஒரு நவீன சிற்பம். இது வெர்ஜினியாவுடைய உளவுத்துறை பிரிவான Central Intelligence Agency அதாவது (CIA) அலுவலக கட்டிடத்தின் முன் நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிற்பத்தின் விசேஷம் என்ன என்றால் இந்த சிற்பத்தில் நான்கு தகவல்கள் கோடிங் முறையில் encrypted செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கில் மூன்று புதிர்கள் தீர்க்கப்பட்டு அதில் உள்ள தகவல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், நான்காவது புதிரை இன்று வரை யாராலும் தீர்க்கப்படவில்லை.

இன்னும் உலக அளவில் தீர்க்கப்படாத unsolved codes ஆக இந்த சிற்பம் இதுவரை இருந்துவருகிறது. மேலும் இதற்கான தீர்வை கண்டுபிடிக்க அந்த கலைஞர் ஏற்கனவே 2 தடயங்களை கொடுத்து உள்ளார். இந்த தடயங்கள் இதை விட குழப்பமாக இருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

3. Voynich Manuscript

இது 15 ஆம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட ஓர் புத்தகம். இந்த புத்தகத்தில் ஒரு வித்தியாசமான மையை பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் தாயகம் இத்தாலியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பிறகு இந்த நூல் 1912 ல் Wilfrid Voynich, என்பவரால் வாங்கப்பட்டது.

இவர் உலகத்தில் உள்ள மிகவும் அரிதான புத்தகங்களை சேகரிக்கக்கூடியவர். இதில் சில பக்கங்கள் தவறி உள்ளது, அதுபோக இன்னும் 240 பக்கங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. இந்த புத்தகம் இடதுதிலிருந்து வலதாக எழுதப்பட்டுள்ளது. மேலும் எடுத்துக்காட்டாக நிறைய படங்கள் வரையப்பட்டுள்ளது.

பல தலைப்பின் கீழ் பல தகவல்கள் இந்த புத்தகத்தில் தரப்பட்டுள்ளது, ஆனால் இது எழுதப்பட்ட மொழியை பற்றி யாருக்கும் தெரியாதலால் இன்னும் இது மர்மமாகவே பார்க்கப்படுகிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களை கொண்டே குறிப்பிட்ட விஷயம் பற்றி இந்த நூல் கூறுகிறது என்று அறிஞர்கள் யூகிக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷை சேர்ந்த பல codebreakers இந்த புத்தகத்தை விளக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், இதுவரையும் ஒருவரால் கூட இந்த புத்தகத்திற்கு விளக்கம் தர முடியவில்லை. இதன் காரணமாக இந்த புத்தகத்தின் மர்மம் இன்னும் அவிழ்க்கப்படாத ஒன்றாக உள்ளது.

4. Stonehenge

தென் கிழக்கு இங்கிலாந்தின், Wiltshire என்ற இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் பிரம்மாண்டமான கற்களால் அமைந்த நினைவுச்சின்னம். நிற்கின்ற இரு பெரிய கற்களும் 13 அடி உயரம் இருக்கும், மேலே 7 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கல் படுக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இந்த கற்கள் 25 டன் இருக்கும். ஆய்வாளர்கள் இந்த கட்டமைப்பின் வயதை கணக்கிடும்போது கி.மு. 2000 முதல் 3000 இருக்கலாம் என நம்புகின்றனர். அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இந்த கட்டமைப்பை எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்னும் விளங்காத மர்மமாக உள்ளது.

5. The Taos Hum

மெக்சிகோவில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் இந்த Taos Hum. இந்த சிறிய கிராமத்தில் அடிவானத்தில் ஒரு வினோதமான சப்தத்தை கேட்க முடிகிறது. அதாவது தூரத்தில் ஒரு டீசல் என்ஜின் இயங்குவது போல.

இதை வெறும் காதுகளில் கேட்க முடிகிறதே தவிர சப்தத்தை உணரக்கூடிய வேறு எந்த கருவிகளிலும் இதை பதிவு செய்ய முடிவதில்லை. அங்கே அருகில் வசிக்கக்கூடிய மக்கள் இதை உணருகிறார்கள்.

திறந்த வெளியில் உள்ளதை விட வீட்டினுள் இது அதிகமாக கேட்பதாக சொல்கின்றனர். ஒலி அதிவெண்களை ( frequency ) ஆய்வு செய்யும் பலரும் இதை ஆராய்ந்து விட்டனர் எப்படி வருகிறது, எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் விடை கிடைக்காத மர்மமாக உள்ளது.

மேலும் இந்த சப்தம் இடையூறாக இருப்பதாகவும் மக்களால் அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைவலி, மனஅழுத்தம் மற்றும் சில பேருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இந்த சிறிய நகரத்தில் இந்த சப்தம் இன்னும் ஓர் தீர்க்கப்படாத மர்மமாக உள்ளது.

https://i.imgur.com/Dn1M3P6.jpg
84 views, 19:29
Open / Comment
2021-06-03 10:40:40 அபுனா யமதா கு (ኣቡና የማታ ጉሕ) என்பது கெரால்டா மாசிபில் உள்ள எத்தியோப்பியாவின் ஒற்றைக்கல் தேவாலயங்களில் ஒன்றாகும். இது 2580 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிக அழகான தேவாலயம்.

அதை அடைய ஏற்றம் செங்குத்தான மற்றும் ஆபத்தானது. நீங்கள் ஒரு இயற்கை கல் பாலத்தை வெற்றிடத்திற்கு 250 மீட்டர் மேலே கடக்க வேண்டும், பின்னர் கடைசி குறுகிய மர நடைபாதை. ஏறுதலானது கைகளுக்கும் கால்களுக்கும் பிடியால் ஆன செங்குத்து பாறையில் ஏறுவதைத் தொடர்ந்து, ஒரு மீட்டருக்கும் குறைவான அகலமுள்ள மரபலகையில் வழியாக போகவேண்டும்.

இது ஒரு புனிதமான இடமாக இருப்பதால், வெறும் கால்களால் ஏறு வேண்டுமென்று கேட்கப்படுவீர்கள் (எல்லோரும் ஏறுபவர்களுக்கும் வெறும் கால்கள் இருப்பதை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் கவனித்திருக்கவும்).

வறண்ட காற்று மற்றும் ஈரப்பதம் இல்லாதது 5 ஆம் நூற்றாண்டின் ஓவியங்களை அவற்றின் அசல் நிலையில் பாதுகாத்துள்ளன.

வீடியோவை காண்க:


90 viewsN.BalaKumar, edited  07:40
Open / Comment