🔥 Burn Fat Fast. Discover How! 💪

பேய் கதைகள் / அமானுஷ்யங்கள்

Logo of telegram channel tamilhorror — பேய் கதைகள் / அமானுஷ்யங்கள்
Logo of telegram channel tamilhorror — பேய் கதைகள் / அமானுஷ்யங்கள்
Channel address: @tamilhorror
Categories: Uncategorized
Language: English
Subscribers: 202
Description from channel

Powered by @teleTamil team™

Ratings & Reviews

2.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

1

1 stars

0


The latest Messages

2019-03-06 07:00:38 The account of the user that created this channel has been inactive for the last 11 months. If it remains inactive in the next 18 days, that account will self-destruct and this channel will no longer have a creator.
04:00
Open / Comment
2019-02-24 13:01:18 The account of the user that created this channel has been inactive for the last 11 months. If it remains inactive in the next 28 days, that account will self-destruct and this channel will no longer have a creator.
10:01
Open / Comment
2018-01-20 06:37:39 Welcome to teleTamil team.
––––––––––––––––––––––––
Our Official Bot: @teleTamil_bot
––––––––––––––––––––––––
Share Ur Groups/Channels: @ShareGroups
__
Our Groups and Channels:

தமிழ் நண்பர்கள்: @teleTamil
Vijay FC: @MersalThalapathy
Study Materials & Ebooks: @eBooksHub
சமையல் Recipes: @TamilSamayal
Actress Gallery: @ActressPics
Tech தமிழன்: @techTamil
அமானுஷ்யம்: @TamilHorror
Actress Hot Gallery: @HotDivas
--------------------------------------------------------
Our Partners:
Hot Actress Pics: @HotActresses
Tamil E-Media: @Tamil_Media_Navalan
WhatsApp Groups: @WhatsAppGroupsLinks
Social Awareness: @AramSocialAwarenessAssembly
Tamil Quotes: @TamilSMS
Ebooks Library: @EdwinDigitalLibrary
Youth Party: @TamilnaduYouthParty
Troll Cricket: @TrollCricket
Chennai Memes: @ChennaiMemes
Kalakkal Cinema: @KalakkalCinema
தமிழ் சினிமா: @TamilCinema
Cricket News: @CricketLive
---------------------------------------------------------
Powered By @teleTamil_Bot
---------------------------------------------------------
Share this with your Friends, Relatives and On other groups.
10.9K views03:37
Open / Comment
2017-03-19 22:55:01 ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், "நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன்", என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.

அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள். அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள்.

அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள். அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.

தையைக்கேட்ட ஜென் துறவி, "இந்தப் பேய் மிகவும் புத்திசாலியான பேய்தான்" என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற, செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான். அத்துறவியோ புன்னகைத்தபடி, "அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ பெருமைப்பட வேண்டும்" என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்! அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், "உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்" என்கிறான். சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய அள்ளி, " என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்" என்கிறான். அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!

கருத்து: பேய் என்பது வெளியில் இல்லை. நம் மனம்தான் அதை நினைத்து அச்சப்படுகிறது.
11.3K views19:55
Open / Comment
2017-03-14 16:35:29 விர்ர்ர்ர்ர்ர்......

80 கிலோ மீட்டர் வேகத்தில்
விரைந்து கொண்டிருந்தது
அந்த கார்..
காரின் உள்ளே டிரைவர்
சீட்டை ஆக்கிரமித்து
ஓட்டிக் கொண்டிருந்தான்
ராஜ்...

ராஜ் 28 வயது
திருமணமாகி ஒரு வருடம்
ஆகியுருந்தது,,
மனைவி மாலா
தலை பிரவசத்திற்க்காய்
பிறந்த வீடு சென்றிருந்தாள்
பிரசவத்தில் சிக்கல்
என்று டாக்டர் சொன்னதால்
ஒரு வித பதட்டத்துடனே
காரை ஓட்டிக் கொண்டிருந்தான்
மாலாவின் தாய் வீடு
அவன் ஊரில் இருந்து
105 கிலோ மீட்டர் தொலைவில்
இருந்தது...
தீடீரென்று தொலைபேசி
வரவே என்ன
ஏதென்று பதட்டத்த்தில்
கவனியாமல் உடுத்திய உடையுடன்
கிளம்பி விட்டான்...
இதற்க்கு முன் இரவில்
பயணம் செய்திருந்தாலும்
தனியாக பயணம் செய்வது
இதுவே முதல் தடவை,,,



தடக்,,, தடக்,,, கிக்

பள்ளத்தில் ஏறி இறங்கிய
கார் இருட்டைக் கிழித்துக்
கொண்டு அவசர கதியில்
விரைந்து கொண்டிருந்தது...


ராஜ் சாலையில் இருந்து
கண்ணெடுக்காமல் ஓட்டிக்
கொண்டு வந்தான்...
காரின் முகப்பு வெளிச்சத்தின்
முன் இருள் விலகி
வழி விட்டுக் கொண்டிருந்தது...

சுற்றிலும் வீடுகள்
ஒன்று கூட இல்லை...
மருந்துக் கூட எங்கையும்
வெளிச்சத்தைக் காணம்...

சாலையை பார்த்துக்
கொண்டிருந்த ராஜ்க்கு
சற்று தூரத்தில் ஒரு
பெண் கை காட்டி
மறிப்பது புரிந்தது...
திருடர்களை பற்றி
கேள்விபட்டிருந்ததால் காரை
நிறுத்தாமல் சென்று விடலாம்
என்று நினைத்தான்...
ஏனினும் கார் அவளுக்கு
சமீபத்தில் சென்று விட்டதால்
வாகனத்தை அவள்
அருகே நிறுத்தினான்...

சர்ர்ர்க்....

என்னம்மா...?

ஐயா பக்கத்துல தாங்க
என் வீடு என்
கொழந்தைக்கு ரெண்டு
நாளா காய்ச்சல் அடிக்குதைய்யா
ஊர்ல ஆஸ்பத்திரி எதும்
இல்லைங்கைய்யா..
இருந்த ஒரே ஓரு
ஆஸ்பத்திரியும் பூட்டிருக்கு யா..
பக்கத்து டவுன் - ல
மட்டும் என்ன இறக்கி
விட்டுடுங்கையா உங்களுக்கு
புண்ணியமா போகும்யா..
என்றாள் அவள்
அழுது கொண்டே,,,,

ராஜ் அப்பொழுது தான்
அந்த குழந்தையை பார்த்தான்..

கந்தல் துணிக்குள் சுருட்டி
வைக்கப்பட்டிருந்தது...

பார்க்க பரிதாபமாக
இருந்தது.

சரி ஏறிக்க....

ரொம்ப நன்றிங்கைய்யா...
என்று சொல்லியபடி
பின்புறமாக ஏறி
உட்கார்ந்து கொண்டாள்...

டர்ட் ட்....

வண்டி கிளம்பியது....

அவளிடம் ரெண்டொரு
வார்த்தை பேசினான்
அவள் எதுவும் பேசாமல்
அமுது கொண்டே
இருந்தாள்...


அரைமணி நேரம் சென்றது...


சதக்.. சதக்... கட்...
சப்.. சப்... சதக்...

பின்னால் எதோ ஒரு
சத்தம்,,
எதையோ கடித்து தின்பது
போல,,,,

அந்த பெண் எறும்
பொழுது குழந்தையை மட்டும்
தானே வைத்துக் கொண்டு
ஏறினாள்...
இதென்ன சத்தம்...?

என்று காரில் உள்ள
பின்புறமாக பார்க்கும்
கண்ணாடியில் அந்த
பெண்ணைப் பார்த்தான்...


அங்கே.....


அந்த பெண் குழந்தையை
கடித்துத் தின்று கொண்டிருந்தாள்...
வெறித்தனமாக...

ஆக்.. கசக்.. கடக்... கடக்...
சப்....சப்..சப்....


பார்த்த அவனுக்கு மயிர்க்கால்கள்
குத்திட்டு நின்றன...

இதயம் தறுமாறாய்
துடிக்க ஆரம்பித்தன....


மறுபடியும் கண்ணாடியைப்
பார்த்தான்....

அந்த பெண் வெறி
கொண்டு குழந்தையை
தின்று கொண்டிருக்கையும்
வெடுக்கென நிமிர்ந்து
அந்த கண்ணாடியைப்
பார்த்தாள்....

அவள் கடைவாய்
பற்க்கள் எல்லாம் நீளமாய்
இருந்தன...
கண்ணில் கருவிழி
இருக்க வேண்டிய இடத்தில்
வெள்ளையாக....
வாயிலிருந்து இரத்தம்
வடிந்து கொண்டிருந்தது....

அவனைப் பார்த்து
சிரித்தாள்,,,
வெறித்தனமாக,,,,
பேய்த்தனமாக,,,,

ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹி ஹி
ஹி ஹி....


வினாடிக்கு வினாடி
அவள் சிரிப்பு சத்தம்
அதிகரித்தது....

ஹி ஹி ஹி ஈஈஈ
ஹி ஹி ஹி ஈஈ ஹி...


ஈரக்குலையை
நடுங்க வைக்கும் சிரிப்பு...


ராஜ் வெலவெலத்துப்
போனான்..
சற்றும் யோசிக்காமல்
ஓடிக் கொண்டிருக்கும்
கார் கதவை
திறந்து கொண்டு கீழே
குதித்து ரோட்டில்
உருண்டான்...


கார் எங்கோ
மரத்தில் டமால் என்று
மோதிய சத்தம் கேட்டது
மயக்கமடைந்தான்....


மறுநாள் மயக்கம்
தெளிந்து பார்க்கையில்
காரில் சில எலும்பு
துண்டுகள் மட்டும்
கிடந்தன......


- முடிந்தது...
8.9K views13:35
Open / Comment
2017-03-14 16:30:12 உருவம் மறைந்து போனதால் கையிலிருந்த பொருளை உற்று நோக்கினாள் நளினி அப்பொழுது மேலிருந்து ஒரு 'அசீரிரி குரல்' கேட்டது

"எந்த கரையாக இருந்தாலும் அதனை அகற்றி பளீச்சிடும் வேண்மைக்கு உபயோகிப்பீர் RIN RIN RIN(echo voice).




நளினி கையை பார்த்தாள் அவ‌ள் கையில் இருந்த‌து புத்த‌ம் புதிய‌ "RIN SOAP".
5.4K views13:30
Open / Comment
2017-03-14 16:29:28 படித்தது-

இதயம் பலகீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம்,நான் மறக்க நினைத்தும் மறக்க முடியாத கதை. எனது தூரத்து உறவுக்கரரான பிரகாஷ் என்பவரின் குடும்பத்தில் நடந்த ஒரு சொக சம்பவம். பிரகாஷ் சென்னை அடுத்து ஆவடியில் வசித்து வந்தார், அம்பாத்தூரில் உள்ள ஒரு சைக்கிள் கம்பணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்,அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையொடு தன் மனைவி நளினியின் உறவினர்கள் வீட்டு விருந்தையும் முடித்துகொண்டு,நான்கே நாட்களில் பணிக்கு திரும்பி விட்டார்,அதை பார்த்த அனைவரும் குழப்பத்தில் இருந்தனர் கம்பணியில் இருந்தவர்கள் கூட "ஏன்?இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட "என்று கேட்டு இருக்கிறார்கள்.அதற்கு அவர் இந்த லீவ்வே பொதும் என்று கூறிவிட்டார்.அந்த அளவிற்கு தொழில் மீது அவருக்கு பக்தி.இதை அவர் மனைவியும் புரிந்துக்கொண்டு அவரின் விருப்படியே நடந்துக்கொண்டார்,அவர் குடுத்து வைத்தவர் என்று அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள்.தினமும் வேலைக்கு செல்லும் பொது தன் மனைவிக்கு ஆசையாக முத்தம் கொடுத்து விட்டு தான் போவார்.மாலை சரியாக ஆறு மணிக்கு எல்லாம் கையில் 'பூ'வுடன் வந்து இருப்பார்.இப்படி சந்தோஷமாக போயிக்கொண்டிருந்த வேளையில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த சொகம் நடந்து விட்டது.

ஒரு நாள் வழக்கம்பொல் தன் மனைவிக்கு முத்தம் குடுத்து விட்டு,வேலைக்கு புதியதாக வாங்கிய பைக்கிள் கிளம்பினார்.அவர் போன அடுத்த இருபது நிமிடத்தில் அவர் வீட்டு ஃபோன் அடித்தது அவர் மனைவி நளினி தான் ஃபோனை எடுக்கிறாள்.எதிர்முனையில் கூறிய விஷயத்தை கேட்டு "அய்யோ" என்று கத்தியபடி வேளியே ஒடினாள், மற்றவர்களும் ஒன்னும் புரியாமல் அவளுடன் ஒடினார்கள்.அவர்கள் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் தான் மெயின் ரோடு அங்கே ஒடிப்பொயி அவர்கள் கண்ட காட்சி ....

பிரகாஷ் பைக்கிள் ரோட்டை க்ராஸ் பண்ணுவதருக்கு வண்டியின் வேகத்தை அதிக படுத்திய அதே நேரம் ஒரு நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மொதி நிலைத்தடுமாறி கீழே விழ அப்பொழுது அங்கு வேகமாக வந்த லாரி ஒன்று பிரகாஷ் மீது மோதி அவர் மேல் ஏறிவிட்டது.இதைத்தான் நளினியும் மற்றவர்களும் கண்ட காட்சி.. அதற்குள் போலீஷ் வந்து இவர்களுக்கு தகவல் கொடுத்து இருக்கிறது.பிரகாஷின் உடலை 'பொஸ்ட் மார்டம்'பண்ணுவதருக்கு போலீஸ் அம்புலன்சு முலமாக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுவிட்டனர்.எல்லாம் முடிந்து விட்ட நிலையில்...!

ஒரு வாரம் கழித்து போலீஸ் நளினியை தேடி வந்து பிரகாஷ் விபத்தின்பொது அணிந்து இருந்த ரத்தகறை படிந்த அந்த துணியை கொடுத்தனர்.அதுவரை பிரமைபிடித்தவள்போல் இருந்த நளினி அந்த துணியை பார்த்ததும் 'ஓ'வென்று கதறினாள்.அன்றிலிருந்து அந்த துணியை பார்த்துகொண்டு பிரமைபிடித்தவள்ப்போல் வேறித்து பார்த்துகொண்டே இருந்தாள்.இரண்டு மாதங்கள் ஒடிவிட்டன எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பின.ஆனால் நளினி மட்டும் மாறாமல் அப்படியே இருந்தாள்!வீட்டிலிருந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் அந்த துணியை தூக்கி போடு அது இருக்கும்வரை உனக்கு அந்த‌ ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கும் என்று கூறியும்,நளினி அதை தூக்கி போடவில்லை.

ஒரு நாள் துணித்துவைப்பதற்காக எல்லா துணியையும் எடுத்து கொண்டு நளினி அங்கிருந்த குளக்கரைக்கு தனியாக வந்தாள் யாரும் இல்லை அங்கே.மதியம் 12.00 மணி இருக்கும்.எல்லத்துணிகளையும் துவைப்பதற்கு எடுத்தபொழுது அந்த ரத்தகரை படிந்த துணியும் இருந்தது அதை எடுத்து தண்ணியில் அமுக்கினாள்,திடிரேன்று பயங்கர இடி சத்தம்,திடுக்கிட்டுப்போனாள் நளினி மேலை பார்த்தாள் வானம் இருட்டிக்கொண்டு வந்தது.சுற்றும்முற்றும் பார்த்தாள் ஆள் நடமாட்டமே இல்லை,சரி மழை வருவதற்குள் துவைத்து கிளம்பிட நினைத்து அந்த துணியை மீண்டும் குளத்தில் அமுக்கினாள் மறுபடியும் பயங்கர இடி சத்தம்! இந்த முறை நளினி பயந்து விட்டாள்,ஏதோ நடக்கப்போகிறது என்பதை அவள் உள் மனம் சொல்லிற்று. ‌

இருந்தும் அந்த துணியை துவைக்கமால் போவதில்லை என்று துவைக்க அரம்பித்தாள்.என்ன?ஆச்சாரியம் அந்த துணியிலிருந்த ரத்தகரை சற்றும் போகவில்லை !மீண்டும் மீண்டும் அந்த துணியை அடித்து துவைக்க முயன்றாள் துளிகறையும் போகவில்லை.நளினி புரியாமல் முழித்தாள் அந்த நேரம் மேகம் மேலும் இருட்டிக்கொண்டு இருந்தது,



அப்போழுது மேலிருந்து ஒரு 'ஒளிக்கீற்று' குளத்தின் நடுவே இறங்கி புகை போன்று ஒரு உருவம் தெரிந்தது,அதை பார்த்த நளினியாள் கத்தவும் முடியவில்லை ஒடவும் முடியவில்லை அதே நேரம் அந்த உருவம் அவளை நோக்கி வேகமாக வந்தது, அது அருகில் வர வர பார்த்த உருவம் போல் தொன்ற அமைதியாக நின்றுவிட்டாள்,


அந்த உருவம் அருகில் வந்ததும் அது யார்? என்று பார்ப்பதர்க்குள் அந்த உருவம் ஒரு பேப்பரில் சுருட்டி எதோ ஒன்றை நளினியிடம் குடுத்து மறைந்து விட்டது.

Continues
5.4K views13:29
Open / Comment