2021-09-24 09:24:21
#பம்மல் சம்பந்தனார் நினைவு தினம் - செப்டம்பர் 24.
#தமிழ் நாடகத் தந்தை
பம்மல் சம்பந்தம் 1873ம் வருடம் பிப்ரவரி 9ம் தேதி சென்னையில் பிறந்தவர்.
சம்பந்த முதலியார் மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலராக 1900 முதல் 1924ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
அவரது பதவிக்காலத்தில்தான் அக்கோயில் கோபுரம் கட்டப்பட்டது.
சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் செனட் அங்கத்தினராக இருந்தார்.
இந்து தர்ம சமாஜத்தில் பல ஆண்டுகள் அங்கத்தினராக இருந்து பணியாற்றி உள்ளார்.
சம்பந்தரின் 81ம் பிறந்தநாள் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாடகத்துறையில் பம்மல் சம்பந்தனார்:
பெல்லாரி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் என்பவரிடம் 'சரச விநோதினி சபா' எனும் நாடகக் கம்பெனி நடத்திய தெலுங்கு நாடகமே சம்பந்தர் தமிழ் நாடகம் எழுதக் காரணமாயிற்று.
கோவிந்தராவ் நாடகக் கம்பெனி நடத்திய 'ஸ்திரி சாகசம்' என்ற நாடகமே முதலியார் பார்த்த முதல் நாடகம்.
அந்த நாடகத்தையே 'புஷ்பவல்லி' என்ற பெயரில் சிறிது மாற்றி எழுதினார். அதுவே சம்பந்த முதலியார் எழுதிய முதல் நாடகம்.
சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
Telegram : https://t.me/Thangamuthustudycircle
1891ம் வருடம் ஜூலை மாதம், சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
இவரின் மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோஹரா" (1895)
இவர் "தமிழ் நாடகத்தின் தந்தை" எனப் போற்றப்படுகிறார்.
பம்மல் சம்பந்தனாரின் மறைவு:
தமிழ் நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிய பம்மல் சம்பந்த முதலியார் 24.9.1967 அன்று இறையடி சேர்ந்தார்.
சம்பந்த முதலியார் தன் இறுதிநாள் வரை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.
விருதுகள் மற்றும் சிறப்புகள்:
1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது.
1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.
1959 இல் "பத்மபூஷண்" என்ற பட்டத்தையும் பெற்றார்.
குறிப்பு:
தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்தனார்.
தமிழ் நாடகத் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்.
தமிழ் நாடகப் பேராசிரியர் - பரிதிமாற் கலைஞர்.
தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை - கந்தசாமி.
Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
616 views06:24