2023-03-25 19:24:43
புத்திசாலிகளைப் போல சிந்தியுங்கள் ஆனால் சாதாரண நபர்களைப் போல பேசுங்கள்..
மனம் சோர்வடையும் போது நம்பிக்கையாய் பேசுபவர்களோடு நேரம் செலவிடுங்கள்..
நிச்சயமாக நீங்கள் நம்பக்கூடியவர்கள் வார்த்தையிலேயே உங்களுக்கு வைத்தியம் பார்த்து விடுவார்கள்..
நாட்கள் எல்லாம் அழகாய் பிறக்கிறது. நம் மனநிலை தான் தினமும் தடுமாறுகிறது..
வாழ்க்கையில் எல்லா விஷயமும் நமக்கு பிடிச்ச மாதிரி நடக்காது..
சில விஷயம் நடக்கும். சில விஷயம் நாம் தான் நடத்தனும்..
உனக்கு மன அமைதி வேண்டுமானால், யாருடைய குறையையும் காணாதே...
நிம்மதி இல்லாத புத்திசாலியை விட, சந்தோஷமான பைத்தியகாரன் எவ்வளவோ மேல்...
அருகில் உள்ள கஷ்டங்களை கடந்தால் தான் தொலைவில் உள்ள நிம்மதியை அடையலாம்...
நிறைய சிரித்துப் பாருங்கள் கஷ்டங்கள் குறைந்து விடும்...
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் கஷ்டங்கள் மறைந்து விடும்...!!!
15.0K views16:24