2021-09-04 06:31:32
# இந்தியாவின் முதுபெரும் மனிதர் - தாதாபாய் நௌரோஜி
இவர் 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் நாள் மஹாராஷ்ட்ராவில் பிறந்தார்.
1859 - லண்டனில் முதல் இந்திய வர்த்தக அமைப்பை தொடங்கினார்.
1866 - கிழக்கிந்திய சங்கத்தை தோற்றுவித்தார்.
1867 - வடிகால் கொள்கையை (DrainTheory) வெளியிட்டார்.
இந்தியாவில் முதன்முதலில் தேசிய வருமானத்தை கணக்கிட்டவர் இவர்தான்.
1870 - இந்தியர்களின் தனிநபர் வருமானம் ரூ.20 தான் என்று சுட்டிக்காட்டினார்.
Telegram : https://t.me/Thangamuthustudycircle
1885 - பம்பாய் சட்டமன்ற நியமன உறுப்பினராக பணியாற்றினார்.
1892 முதல் 1895 வரை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.
1901 - "பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும் இந்தியாவின் வறுமையும்" (Poverty and un-British rule in India) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1907 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுற்ற போது மிதவாதிகள் பக்கம் இருந்தார்.
இவர் நடத்திய பத்திரிக்கை - இந்தியாவின் குரல் (Voice of India).
இவர் இந்தியாவின் முதுபெரும் மனிதர் (Grand Old Man of India) என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
இவர் ஜூன் 30 1917ம் ஆண்டு தனது 92வது வயதில் இயற்கை எய்தினார்.
குறிப்பு:
வடிகால் கொள்கை:
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை வடிகாலாக பயன்படுத்தி இந்தியாவின் செல்வத்தை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றதால் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கினர் என்பதை இவரது "வடிகால் கொள்கை" (Drain Theory) விளக்குகிறது.
Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
3.1K viewsedited 03:31